தமிழை வளர்ப்பது எப்படி?

பேரன்பு கொண்ட தமிழ் மக்களே! இன்று ஆங்கிலேயன் போன பிறகும் அவன் மொழி நம் தாய் தமிழை அழித்துக் கொண்டிருகிறது. நாம் உடனே எங்கும் தமிழ் எதிலும் தமிழ் என்பதை பின்பற்றுவோம் இனிமேல் தமிழிலேயே பெயர்கள் வைப்போம், தமிழிலேயே எழுதுவோம், அந்நிய மொழிகளை தவிர்ப்போம். செம்மொழியான தமிழ் மொழியை இப் பூலோகம் முழுதும் பரப்புவோம்... பரப்பி? முடியலைடா சாமி....




நம்ம முக்கியமா புரிஞ்சிக்க வேண்டிய விஷயங்கள் மூணு:

1. மொழியோட முதல் பயன்பாடு பேச்சு
ஒரு மொழி முதன்மயாவும் அதிகமாவும் எங்க உபயோக படுதுன்னு பாத்தீங்கண்ணா பேசரக்கு தான். நீங்க செந்தமிழ்ல பதிவு எழுதரனாலையோ இல்ல தொல்காப்பியம், சீவக சிந்தாமணி, புறநானூறுன்னு படிகறதுனலையோ மட்டும் தமிழ் வளந்துரபோறது இல்லை. நீங்க யார் கிட்ட பேசுனாலும் அவங்களுக்கும் தமிழ் தெரிஞ்சா, அவங்க கூட தமிழ்ல பேசுனாலே உங்களுக்கு புண்ணியமா போகும்.


எந்த மொழியா இருந்தாலும் அது பேச பேச தான் வளரும். எழுத்து உருவே இல்லாத மொழிகள் எவ்வளவோ இருக்கு ஆனா பேச்சு வழக்குல இல்லாம வெறும் எழுத்தா மட்டும் இருக்குற மொழிகள் ரொம்ப கம்மி. பேசப்படும் மொழி மனிதன் இருக்கற வரைக்கும் வளரும் ஆனா வெறும் எழுத்து உரு மட்டும் இருக்கற மொழி ரொம்ப நாள் தாங்காது. 


முடிஞ்ச வரைக்கும் தமிழன் அவனுக்கு தெரிஞ்ச கோயம்புத்தூர் தமிழோ, நெல்லை தமிழோ, சென்னை தமிழோ, மதுரை தமிழோ, தஞ்சை தமிழோ இல்லை ஈழ தமிழோ எதோ ஒரு தமிழ்ல பேசுனாலே தமிழ் வளரும். பிற மொழி கலப்பு இல்லாம தமிழ் பேசுறது சிரமம் தான் ஏன்னா நம்ம உபயோக படுத்துற கரண்ட், கம்ப்யூட்டர், இன்டர்நெட், ஈமெயில், கார், பைக், செல் போன், பேன், லைட்டு இது எதுக்குமே மூலம் தமிழோ தமிழனோ இல்லை. அதனால பிற நாட்டு காரன் கண்டு புடிப்போட பேர தமிழ்ல மொழி பெயர்குற வேலைய விட்டுட்டு, ஒழுங்கா மம்மி டாடிக்கு பதிலா அம்மா அப்பான்னு கூபிட்டாலே போதும்.


2. பொது ஜனத்துக்கு புடிச்சது புதுமையே
அந்த காலத்துல கவிதை கதை இதெல்லாம் தமிழ் தெரிஞ்சா மட்டும் படிச்ச்சிட முடியாது ஏன்னா  எல்லாமே வெண்பா செய்யுள் வடிவுல இருக்கும் பொது ஜனத்துக்கு புரியாது. உங்களுக்கு புரியற மாறி சொல்லணும்னா உங்களால அஞ்சாவதோ ஆறாவதோ படிக்கும் போது தமிழ் புத்தகத்துல இருக்கற செய்யுள், திருக்குறள், புறநானூறு இதெல்லாம் படிச்சா புரியாது (இப்பவும் புரியாதுங்கறது வேற விஷயம்) தமிழ் வாத்தி ஒவ்வொரு வரியா படிச்சு வெளக்கம் சொன்ன தான் புரியும். ஏனா அத நீங்க படிக்கும் போது தமிழ்னு தெரியும் ஆனா புரியாது அதுக்கு கொஞ்சம் புலமை வேணும். அதனாலேயே நெறைய பேருக்கு எப்படி கணக்கு பாடம் புடிக்காதோ அதே மாறி மனப்பாட செய்யுளும் புடிக்காது.  


இந்த அளவுக்கு கல்வி அறிவு தொழில் நுட்பமெல்லாம் இல்லாத அந்த காலத்துல பாரதியார் ஒன்னு பண்ணினாரு, அதாவது ரொம்ப சுலபமான வார்த்தைகள்ல கவிதை எழுதினாரு தமிழ் படிக்க தெரிஞ்ச ஒரு சராசரி தமிழனுக்கும் புரியற வகைல அவரோட கவிதைகள் இருந்துச்சு. அவர் கையாண்ட அந்த முறை தான் "புது கவிதை" பின்னாடி பாரதி தாசன்ல இருந்து இன்னைக்கு சினிமாக்கு பாட்டு எழுதறவங்க வரைக்கும் அந்த எளிய புதிய முறைய தான் கையாள்றாங்க.


ஒரு முக்கியமான விசயத்த நீங்க கவனிசிருந்தா புரியும் தமிழ பத்தி எந்த ஒரு தொலைகாட்சி நிகழ்ச்சி நடந்தாலும் இல்ல வெளியில எந்த நிகழ்ச்சி நடந்தாலும் நம்ம செம்மொழி மாநாடு உட்பட, அந்த மேடை வடிவமைப்பு அலங்காரங்கள் எல்லாமே நம்ம பழைய நாகரிகத்தையும் புராணங்களையும் குரிக்கற மாறி தான் இருக்கும். தெளிவா சொல்லணும்னா தமிழ்னாலே ஒரு பழமையான தொன்மையனங்கர என்னத்த தான் வரவழைக்கும். பேசுறவங்க கூட ஒரு இயல்பா தினசரி வாழ்க்கைல பேசற மாறி பேச மாட்டாங்க ஏதோ எதிர் கட்சி காரண செந்தமிழ்ல  சண்டைக்கு இழுக்கற தொனியிலேய பேசுவாங்க. குறிப்பா இந்த பேச்சு குழந்தைகளுக்கோ இளைய தலை முரயினருக்கோ சுத்தமா புடிக்காது. தமிழ் உண்மையா வளரனும்னா பழங்கதைகள் பேசாம புதுமையா எதாவது பேசணும். தமிழ் சார்ந்த நிகழ்சிகள் பழமையானங்கர எண்ணம் நீக்கப்பட்டு தமிழ் இன்னும் இளமையானதுங்கர என்னத்த வரவழைக்கணும் குறிப்பா குழந்தைகளுக்கும் இளைஞர்களுக்கும் புடிக்கற மாறி புதுமையா இருக்கணும். "மாறாதது மாற்றம் மட்டுமே"ன்னு சொல்லுவாங்க இந்த உலகத்துல எது புதுமைகள தனக்குள்ள ஏத்துகிட்டு பரிமானம் அடையுதோ அது மட்டும் தான் பிழைக்கும், இது மொழிக்கும் பொருந்தும்.


3. எளிமையே வலிமை
'எளிமையே வலிமை' இது மனிதனுக்கு மட்டும் அல்ல மொழிக்கும் தான். அறிவியல் ரீதியாக எந்த மொழி மிக எளிய சப்தங்களை (pronunciation) கொண்டு இருக்குதோ அத யார் வேணும்னாலும் சீக்கிரம் கத்துக்க முடியும் நம்ம தமிழ் அப்படி பட்ட மொழி தான் எளிமையான அதே சமயம் இனிமையான மொழி. அப்புறம் என்ன பிரச்சினைன்னு கேக்கரீங்களா... சொல்றேன். நம்மாளுக தமிழ்ல பேசறேன்னு சொல்லிட்டு பண்ற அலும்பு தாங்க முடியாது. 


தோழரே காலை உணவு அருந்தி விட்டீர்களா? உங்கள் மடிக் கணினியில் இனைய தள தொடர்பு வேலை செய்கின்றதா?


நண்பா சாபுட்டியா? உன்னோட லேப்டாப்ல நெட் வேலை செய்யுதா?


இந்த ரெண்டுல எது உங்களுக்கு எளிமைய இருக்கு? செந்தமிழ்ல பேசுனா தான் தமிழ் பேசுறதா அர்த்தமா? லேப்டாப்பும் இன்டர்நெட்டும் நம்ம கண்டு புடிக்கல அது கண்டு புடிச்சவன் வெச்ச பேரு அத எதுக்கு மொழி பெயர்த்து சொல்லணும்? இப்போ உங்க பேரு சாமியப்பன்னு வெச்சுகுங்க நீங்க அமெரிக்கா போனீங்கன்னா உங்கள சாமியப்பன்னு கூப்டுவாங்களா இல்ல Godfather-னு கூப்டுவாங்களா? நான் சொல்ல வர்றது இது தான் தமிழ வளர்கனும்னா நடைமுறை தமிழ்ல பேசுனா போதும் செந்தமிழ்ல பேசணும்ங்கர கட்டாயம் இல்ல அதே மாறி அடுத்தவன் கண்டுபுடிப்புகளுக்கு தமிழ்ல பேர மொழி பெயர்க்க வேண்டிய அவசியமும் இல்ல. ரொம்ப கஷ்ட படமா முடிஞ்ச வரைக்கும் தமிழ்ல பேசுனாலே போதும். 


அவ்வளவு தான் மக்களே!


இவ்வளவு நீளமா இருக்கற பதிவ படிக்கவே மொடயா இருக்குது நான் எங்க போயி தமிழ வளக்கறது...ஆனா எதாவது பண்ணி நாமளும் தமிழ வளக்கனும்னு நினைகரீங்களா? அப்ப ஒன்னு பண்ணுங்க உங்க குழந்தைக்கு தமிழ்னு பேரு வச்சு வளங்க... நானும் தமிழ வளர்த்தேன்னு நாளைக்கு நீங்க சொல்லிக்கலாம்!


குறிப்பு: ரொம்ப நீளமா எழுதிட்டேன்னு நெனைக்கிறேன் அடுத்த பதிவ முடிஞ்ச வரைக்கும் சுருக்கமா சொல்ல பாக்குறேன். அப்புறம் முடிஞ்ச வரைக்கும் எழுத்துப் பிழைகல சரி செஞ்சிருக்கேன் எதாவது கண்ணுல பட்டா கண்டுகாதீங்க :)

4 comments:

vaarththai said...

//அப்புறம் முடிஞ்ச வரைக்கும் எழுத்துப் பிழைகல சரி செஞ்சிருக்கேன் எதாவது கண்ணுல பட்டா கண்டுகாதீங்க :)//

இப்படியெல்லாம் தப்பிக்கிறதா...?

சர்பத் said...

தப்பிக்கறது: தமிழ்ல எனக்கு புடிச்ச ஒரே வார்த்தை ;)

தமிழ்த்தோட்டம் said...

மிகவும் பயனுள்ள பகிர்வு

Unknown said...

I need more information about how to develop tamil language.

Post a Comment

Related Posts Plugin for WordPress, Blogger...